Followers

Wednesday, November 18, 2009

சென்னை மாநகராட்சிக்கு ஓர் கடிதம்.


மதிப்பிற்குரிய மாநகராட்சி அதிகாரி அவர்களுக்கு,


என் கோரிக்கையை தங்கள் முன் வைப்பதற்கு முன்னால் என்னை பற்றி ஓரிரு வரிகள். சொல்லி கொள்ள பெருமையாக எதுவும் இல்லை, வார நாட்களை பெங்களுரிலும், வார இறுதியை சென்னையிலும் கழிக்கும் சராசரி லட்ச தமிழர்களில் ஒருவன் நான். சென்னை சென்ட்ரலில் இறங்கி, மேற்கு மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்கு மின்சார ரயில் மாறி வருவது வழக்கம், அந்த 17 நிமிட ரயில் பயணத்தில், ஒன்றை மட்டும் நான் கவனிக்க தவறியதே இல்லை. அது சென்னை நகரத்தின் சிறப்புகளில் ஒன்றான "ரிப்பன் பில்டிங் "தான். அதிலும் மாநகராட்சி கட்டிடத்தின் இரு பக்கத்திலும் எழுதி இருக்கும் இரு வாக்கியங்கள் எனக்குள் ஒரு சிறு வருத்தத்தை தரதான் செய்கின்றன. அது தான் "தமிழ் வாழ்க, தமிழ் வளர்க" என்னும் வாக்கியங்கள். அதை எப்படியாவது "வாழ்க தமிழ், வளர்க தமிழ்" என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. என்ன இரண்டிற்கும் பொருள் ஒன்று தானே என்று தாங்கள் என்ன கூடும். கம்ப இராமாயணத்தில் கம்பர் ஒன்றை கூறுவார். சீதையை தேடி செல்லும் ஹனுமான், சீதையை கண்டு வருவார். சீதை பற்றி தகவல் அறிய ஆவலுடன் காதுக்கும் ராமனின் வாடிய முகத்தை பார்த்து ஹனுமான் முதலில் "கண்டேன் சீதையை என்பார். சீதையை கண்டேன் என்று சொல்லாமல் கண்டேன் சீதையை என்று ஹனுமான் சொன்னதற்கு காரணமாக கம்பர் சொன்னது. " சீதையை என்று சொல்லி முடிப்பதற்குள் சீதைக்கு என்ன ஆயிற்றோ என்று ராமன் பதறி விடுவாரோ? இல்லை சீதையை பற்றி வேறு எதாவது தப்பாக நினைத்துவிடுவாரோ? என்ற எண்ணத்தில், பொருளை முதலில் சொல்லி பெயரை பிறகு ஹனுமான் சொன்னதாக சொல்லுவார். கம்பனின் திறமைக்கு இன்னொரு சாட்சி. அதே கவலை தான் அடியேனுக்கும். வாழ்க என்று சொன்னவுடன் வாழ்க ஹிந்தி என்றோ , வாழ்க ஆங்கிலம் என்றோ சொல்லி முடித்தால் தவறில்லை. பிற மொழி வாழ்ந்தால் எனக்கு வருத்தம் இல்லை. அனால் முதலில் தமிழ் என்றவுடன் யாரேனும் ஒழிக என்று முடித்து விட்டால் அதை ஏற்க்கும் பொறுமை எனக்கு இல்லை. தமிழ் வாழ நான் எதுவும் பெரிசாக செய்யாவிட்டாலும், வாக்கியமாவது என்னால் மாறினால் பெரிய சாதனை செய்த சந்தோஷம் எனக்கு கிடைக்கும். தாங்கள் தயவு செய்து என் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.


இப்படி,

தமிழை வளர்க்க துடிக்கும்,

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்.

Wednesday, October 21, 2009

அவளுள்அடக்கம்!!!

 காற்றுக்கு ஒரு சவால்...
அவள் கண்இமை அசைவுகள் என்னை சாய்த்துவிடும்,
உன்னால் முடியுமா??
நெருப்புக்கு ஒரு சவால்...
அவள் ஆசை சொற்கள் என்னை உருக்கிவிடும்,
உன்னால் முடியுமா??

கடலுக்கு ஒரு சவால்...
அவள் கண்ணிரு துளிகள் என்னை மூழ்கடிக்கும்,
உன்னால் முடியுமா??

மண்ணுக்கு ஒரு சவால்...
அவள் இதயம் போதும் என்னை புதைத்துவிட,
உன்னால் முடியுமா??

விண்ணுக்கும் ஒரு சவால்...
அவள் காதலால் நான் வளர்வேன் உன்னையும் தாண்டி
தடுக்க உன்னால் முடியுமா??
வீண் போட்டி எதற்கு? என் பஞ்சபூதமும் அவளுள் அடக்கம்!!!!

Sunday, October 11, 2009

ஏக்கங்கள்!!!

காதலை தேடி என் முதல் பயணம்!
காண்பவை அனைத்திலும் உந்தன் தரிசனம்!!
தேவையோ எனக்கு உந்தன் கரிசனம்!!!

உன்னால் என் மனமோ அலைப்பாய!
உன்னை தேடியே என் கண்களும் ஓய!!
தேவையோ உந்தன் தோள்கள், என் தலை சாய!!!
என் காதலும் நேசமும் உனக்கு மட்டும்!
அன்பும் அக்கறையும் உனக்கு என்றும் கிட்டும்!!
உன் காதல் வார்த்தைகள் என்று என்னை எட்டும்?!!!


கண்டேன் காதலை எல்லாம் உன்னால்!
உலகையும் வெல்வேன் உன்னால் ஒரு நாள்!!
உன் காதலை கேட்கும் அந்நாள் என் திருநாள்!!!


காதல், கனிவு, பாசம், நேசம்!
இவை நீ தந்தால் என் வாழ்வும் மனம் வீசும்!!
அன்று தான் என் மௌனமும் மொழி பேசும்!!!




Saturday, October 10, 2009

ஆதங்கம்..

மனிதர்களே ,
உங்கள் உணவை நீங்கள் சரியாக வாயில் போடும் போது,
என் உணவை மட்டும் தரையில் போடுவது ஏன்??

-- இப்படிக்கு குப்பை தொட்டி..

Friday, October 9, 2009

ஆல்ப்ஸ்..

ஏ ஆல்ப்ஸ் சிகரமே!!!
எங்கள் மக்களுக்கு உடுத்த உடை இல்லை.
உனக்கு
பனியில் போர்வை தேவை தானோ?

அகராதி!!!


என்னை நான் அர்த்தம் காண,
உன்னை என் மனம் தேடுகிறதே??
உன்னை என் அகப்பாதி என்று நினைத்தேன்,
இல்லை நீ தான் என் அகராதி!!!

Thursday, October 8, 2009

யார் நீ?

செவிக்கு உயிர் தந்த இசைத்தமிழ் நீ !!!
கண்ணில்நிறைந்திருக்கும் கன்னித்தமிழ் நீ!!!
சொல்லால் சுவையூட்டும் சொற்றமிழ் நீ !!!
நான் உயிரென நேசிக்கும் நற்றமிழ் நீ !!!
பொக்கிஷமாய் நான் போற்றும் பொற்றமிழ் நீ !!!
பெண் உருவில் தேவதை நீ !!!
கண்ணுக்கு தெரிகின்ற கடவுள் நீ!!!
காதலை சொன்ன புது காவியம் நீ !!!
எனை ஆளும் அரசியும் நீ !!!
வேள்வியின் பொருளும் நீ !!!
வெற்றியின் வழியும் நீ !!!
தாயும் நீ , என் சேயும் நீ !!!
என் உயிரும் நீ !!!
நீ இன்றி நான் இல்லை,
நீயும் நானும் வேறில்லை,
இதை உணர்ந்த பின் நானாக நான் இல்லை :)

சமர்ப்பணம்!!!

பாசம் பொழியும் பாவைக்காக!
அன்பை அருளும் அழகிக்காக!
தென்றாலாய் தீண்டிய தாரகைக்காக!
மகிழ்ச்சியை மல்கிய மங்கைக்காக!
பூபோல் புன்னகைக்கும் பூவைக்காக!
மாற்றமாய் மனம் நுழைந்த மடந்தைக்காக!
உயிருள் உறைந்த உறவுக்காக!
ஆம் தேவதையே உனக்காக சமர்ப்பணம்
"என் காதலும், எதிர் காலமும்"!!!