Followers

Sunday, October 11, 2009

ஏக்கங்கள்!!!

காதலை தேடி என் முதல் பயணம்!
காண்பவை அனைத்திலும் உந்தன் தரிசனம்!!
தேவையோ எனக்கு உந்தன் கரிசனம்!!!

உன்னால் என் மனமோ அலைப்பாய!
உன்னை தேடியே என் கண்களும் ஓய!!
தேவையோ உந்தன் தோள்கள், என் தலை சாய!!!
என் காதலும் நேசமும் உனக்கு மட்டும்!
அன்பும் அக்கறையும் உனக்கு என்றும் கிட்டும்!!
உன் காதல் வார்த்தைகள் என்று என்னை எட்டும்?!!!


கண்டேன் காதலை எல்லாம் உன்னால்!
உலகையும் வெல்வேன் உன்னால் ஒரு நாள்!!
உன் காதலை கேட்கும் அந்நாள் என் திருநாள்!!!


காதல், கனிவு, பாசம், நேசம்!
இவை நீ தந்தால் என் வாழ்வும் மனம் வீசும்!!
அன்று தான் என் மௌனமும் மொழி பேசும்!!!




1 comment: