காற்றுக்கு ஒரு சவால்...
அவள் கண்இமை அசைவுகள் என்னை சாய்த்துவிடும்,
உன்னால் முடியுமா??
நெருப்புக்கு ஒரு சவால்...
அவள் ஆசை சொற்கள் என்னை உருக்கிவிடும்,
உன்னால் முடியுமா??
கடலுக்கு ஒரு சவால்...
அவள் கண்ணிரு துளிகள் என்னை மூழ்கடிக்கும்,
உன்னால் முடியுமா??
மண்ணுக்கு ஒரு சவால்...
அவள் இதயம் போதும் என்னை புதைத்துவிட,
உன்னால் முடியுமா??
விண்ணுக்கும் ஒரு சவால்...
அவள் காதலால் நான் வளர்வேன் உன்னையும் தாண்டி
தடுக்க உன்னால் முடியுமா??
வீண் போட்டி எதற்கு? என் பஞ்சபூதமும் அவளுள் அடக்கம்!!!!





